மரங்கள்

எல்லா
மரங்களும்
புகைப்படமாகவேயிருக்கின்றன
ஒரு சருகு
விழும் வரை..
ஒரு பறவை
வந்தமரும் வரை..
ஒரு பெருங்காற்று
வீசும் வரை..
ஒரு மழை
பெய்யும் வரை..
ஒரு கோடரியோ
ஒரு அரிவாளோ
வெட்டும் வரை..
எல்லா
மரங்களும்
புகைப்படமாகவேயிருக்கின்றன
Ravi Selvaraj

Ravi Selvaraj

Author